என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை - பிரதமர் மோடி இவ்வாறு கூறினாரா?
Byமாலை மலர்4 Jun 2020 4:51 AM GMT (Updated: 4 Jun 2020 4:51 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக கூறினாரா என தொடர்ந்து பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியின் போது ஒரு கோடி கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார் என கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் படம் தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தி அடங்கிய ஸ்கிரீன்ஷாட் ஆகும்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் செப்டம்பர் 2018 முதல் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் திட்டத்தின் கீழ் பயன்பெற்றோரின் எண்ணிக்கையை பிரதமர் மோடி தெரிவித்தார் என தெரியவந்துள்ளது. பின் தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் பிழை ஏற்பட்டதும், அதற்கு திருத்த செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டதும் தெரியவந்தது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X