search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவீஷ் குமார்
    X
    ரவீஷ் குமார்

    பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ்குமார் நியமனம்

    பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி;

    பின்லாந்து நாட்டிற்கான இந்தியத் தூதராக ரவீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    ரவீஷ்குமார் தற்போது இந்திய வெளியுறவுத்துறை இணைச்செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளராக அவர் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×