search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (பழைய படம்)
    X
    கொரோனா பரிசோதனை (பழைய படம்)

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2,560 பேருக்கு கொரோனா: 122 பேர் பலி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 122 பேர் பலியாகியுள்ளனர்.
    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 2,287 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,300 ஆக அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று 2,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 74,860 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரு நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2587 ஆக அதிகரித்துள்ளது.

    32,329 பேர் குணமடைந்துள்ளனர். இந்த தகவலை மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×