search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
    X
    கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

    கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது - பெற்றோர்கள் மனு

    கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும் வரை பள்ளிகளை திறக்கக்கூடாது என 2 லட்சத்துக்கும் மேலான பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்றை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
    புதுடெல்லி:

    மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஜூலை மாதம் ஆலோசனை நடத்திய பிறகு, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 2 லட்சத்து 13 ஆயிரம் பெற்றோர் கையெழுத்திட்ட மனு ஒன்று, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆன்லைன் வழி கல்வி  கோப்புப்படம்


    ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பது என்பது அரசின் மிகமோசமான முடிவாகும். நெருப்பை அணைக்க வேண்டி இருக்கும்போது, நெருப்புடன் விளையாடுவதற்கு சமமானது. நடப்பு முதலாவது பருவம், ஆன்லைன் வழியிலேயே நீடிக்க வேண்டும். கொரோனா அபாயம் முற்றிலும் நீங்கும்வரையோ, அல்லது, தடுப்பூசி கண்டுபிடிக்கும்வரையோ பள்ளிகளை திறக்கக்கூடாது.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×