என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வைரலாகும் இந்திய-சீன வீரர்களின் மோதல் வீடியோ
Byமாலை மலர்2 Jun 2020 4:35 AM GMT (Updated: 2 Jun 2020 4:35 AM GMT)
லடாக் எல்லை மோதல் தொடர்பாக வைரலாகும் வீடியோவுக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்து உள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே லடாக் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அடிக்கடி அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.
லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருப்பதால், அச்சுறுத்தலை சமாளிக்க கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவமும் தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் தூதரக ரீதியில் சமரச முயற்சி மேற்கொண்டு உள்ளன.
இந்த நிலையில், லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோ எந்த தேதியில் பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால் இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று இந்திய ராணுவம் மறுத்து இருக்கிறது.
நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பிரச்சினைகளை உணர்வுபூர்வமாக பெரிதுபடுத்த நடக்கும் முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த வீடியோ, எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலையை திசை திருப்பும் வாய்ப்பு இருப்பதால் அதை ஒளிபரப்ப வேண்டாம் என்று காட்சி ஊடகங்களை கேட்டுக்கொள்கிறோம்.
இரு தரப்புக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி தீர்வுகாண ராணுவ தளபதிகள் பேச்சுவார்தை நடத்தி வருகிறார்கள். தற்போது அங்கு மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X