search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படங்கள்
    X
    வைரல் புகைப்படங்கள்

    கொரோனா கலவரத்தில் இப்படி ஒரு சிந்தனையா? வைரலாகும் புகைப்படங்கள்

    கொரோனா நோயாளி ஒருவர் தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



    மருத்துவமனை உடைகளை அணிந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவுகளில் கொரோனா நோயாளி ஒருவர் பெண் மருத்துவரை காதலித்து, அதே மருத்துவமனையில் இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

    வைரலாகும் புகைப்படங்களில் ஒருவர் பெண்ணின் கை விரலில் மோதிரம் அணிவிப்பதும், மற்ற புகைப்படங்கள் இருவரும் ஒருவொரை ஒருவர் பார்த்து கொள்வது போன்று எடுக்கப்பட்டு இருக்கிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    புகைப்படங்களை ஆய்வு செய்ததில் அவை திருமணத்துக்கு முன் மணக்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது. இந்த ஜோடிக்கு 2018 ஆம் ஆண்டிலேயே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. மேலும் புகைப்படங்களில் இருக்கும் இருவருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை.

    அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள விவரங்களின் படி புகைப்படங்களில் இருக்கும் ஜோடியின் காதல் கொரோனா வார்டில் மலர்ந்தது இல்லை என்பதும், இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×