search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்
    X
    நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்

    நேற்று மட்டும் 230 பேர் மரணம்- இந்தியாவில் 5394 ஆக உயர்ந்த கொரோனா உயிரிழப்பு

    இந்தியாவில் கொரோனா வைரசால் 1.90 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க, அதிகரிக்க, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    பல்வேறு தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு இன்று தொடங்கி உள்ள நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதன், இந்தியாவில் மொத்தம் 190535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பரிசோதனை

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 230 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5394 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 91819 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4835 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 93322 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 67655 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 22333 பேருக்கும், டெல்லியில் 19844 பேருக்கும், குஜராத்தில் 16779 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×