search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சித்தூர் அருகே மலையில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை

    சித்தூர் அருகே மலையில் இருந்து குதித்து பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    சித்தூர் மாவட்டம் மதனபள்ளி பாலாஜி நகரை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மனைவி சுஜனகுமாரி (வயது27). கணவன், மனைவியான இருவரும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

    ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் மதனபள்ளிக்கு வந்தனர். ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடந்த விஸ்வநாத், சுஜனகுமாரி மற்றும் குடும்பத்தினர் மல்லையாகொண்டாவில் மலை மீது உள்ள கோவிலுக்கு சென்றனர்.

    அனைவரும் கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த போது சுஜனகுமாரி மலை மீது இருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மதனபள்ளி தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து சுஜனகுமாரி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×