search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குணமடைந்தவரை வழியனுப்பி வைக்கும் மருத்துவ ஊழியர்கள் (பழைய படம்)
    X
    குணமடைந்தவரை வழியனுப்பி வைக்கும் மருத்துவ ஊழியர்கள் (பழைய படம்)

    இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் குணம் அடைந்தனர்

    இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 200-க்கும் அதிகமானோர் குணம் அடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவோர், சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.

    அந்த வகையில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11 ஆயிரத்து 264 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    இதன்மூலம் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 370 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 47.40 சதவீதம் பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பது ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளது.
    Next Story
    ×