search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோயாளியை சோதிக்கும் மருத்துவர்
    X
    நோயாளியை சோதிக்கும் மருத்துவர்

    ராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா பாதிப்பு

    ராஜஸ்தானில் ஒரே நாளில் 252 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 600 ஐ கடந்துள்ளது.
    ஜெய்ப்பூர்:

    கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஜூன் 30 -ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 8,617 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவுக்காக 193 பேர் பலியாகினர்  என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×