search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராவியில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்
    X
    தாராவியில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யும் சுகாதார ஊழியர்

    மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

    மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனாவால் 1.65 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7466 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4706 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 71106 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று 56948 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 59546 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 2598 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் நேற்று மட்டும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1982 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 
    Next Story
    ×