என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர்: மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
Byமாலை மலர்29 May 2020 3:48 AM GMT (Updated: 29 May 2020 3:48 AM GMT)
சிறப்பு ரெயில்கள் மூலம் மராட்டியத்தில் இருந்து சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறியுள்ளார்.
மும்பை :
கொரோனா பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் வேலையின்றி தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளர்கள் ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இதுவரை மராட்டியத்தில் இருந்து சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை 696 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 374 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கா்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு முறையே 169, 33, 30, 6, 13 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல ராஜஸ்தானுக்கு 15 ரெயில்களும், மேற்கு வங்கத்துக்கு 33 ரெயில்களும், சத்தீஸ்கருக்கு 6 ரெயில்களும் சென்று உள்ளன. இந்த ரெயில்கள் மும்பை சி.எஸ்.எம்.டி., எல்.டி.டி., பன்வெல், போரிவிலி, பாந்திரா டெர்மினஸ், தானே, புனே, அவுரங்காபாத், கோலாப்பூர், நாக்பூரில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளன. இந்த ரெயில்களில் மொத்தம் 9.82 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்று உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா பிரச்சினை காரணமாக மகாராஷ்டிராவில் வேலையின்றி தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளர்கள் ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் மூலமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இதுவரை மராட்டியத்தில் இருந்து சுமார் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை 696 ஷார்மிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 374 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. பீகார், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கா்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு முறையே 169, 33, 30, 6, 13 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல ராஜஸ்தானுக்கு 15 ரெயில்களும், மேற்கு வங்கத்துக்கு 33 ரெயில்களும், சத்தீஸ்கருக்கு 6 ரெயில்களும் சென்று உள்ளன. இந்த ரெயில்கள் மும்பை சி.எஸ்.எம்.டி., எல்.டி.டி., பன்வெல், போரிவிலி, பாந்திரா டெர்மினஸ், தானே, புனே, அவுரங்காபாத், கோலாப்பூர், நாக்பூரில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளன. இந்த ரெயில்களில் மொத்தம் 9.82 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்று உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X