என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா: டெல்லியில் 1,024 பேர்
Byமாலை மலர்28 May 2020 4:02 PM GMT (Updated: 28 May 2020 4:02 PM GMT)
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் இன்று 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 85 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1982 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்நிலையில் இன்று 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 16,281 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X