என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐந்து மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள் வரத்தடை: கர்நாடக அரசு அதிரடி
Byமாலை மலர்28 May 2020 2:39 PM GMT (Updated: 28 May 2020 2:39 PM GMT)
ஐந்து மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள், மற்ற வாகனங்கள் வர கர்நாடக அரசு அதிரடியாக தடைவிதித்துள்ளது.
இந்தியாவில் 60 நாட்களுக்கு மேல் பொது ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் கொரோனா வைரசின் தொற்று குறைந்த பாடில்லை. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.
இதற்கிடையில் ரெயில்கள் மற்றும் விமானங்கள் சேவை தொடங்கியுள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது அந்த மாநிலங்கள் கொரோனா தொற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சற்று கவனக்குறைவாக இருந்தாலும் கிராமம் வரை வெளிமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து விமானங்கள், ரெயில்கள், மற்ற வாகனங்கள் வர தடைவிதிக்கப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கையை கர்நாடகா அரசு எடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X