என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைப்பு
Byமாலை மலர்28 May 2020 9:34 AM GMT (Updated: 28 May 2020 9:34 AM GMT)
தமிழகத்தில் இருந்து 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
புதுடெல்லி:
புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி கிடைக்காமல் நடந்து செல்லும் நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாணை நடத்துகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்? ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தாலும் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்புடையதாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழகத்தில் இருந்து சுமார் 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்தாக தமிழக அரசு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியது.
‘தமிழகத்தில் இருந்து 2,22,600 பேர் ரயில்கள் மூலமும், 5,200 பேர் பேருந்துகள் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 178 முகாமில் உள்ள 28,000 பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. 3,17,000 பேருக்கு ரேஷனில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது’ எனவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 3.36 லட்சம் தொழிலாளர்கள் வீதம் இதுவரை 47 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி கிடைக்காமல் நடந்து செல்லும் நிலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாணை நடத்துகிறது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல எத்தனை நாட்களாகும்? ரெயில் பயணத்திற்கு முன்பதிவு செய்தாலும் வாரக்கணக்கில் காத்திருக்கும் சூழல் ஏற்புடையதாதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது தமிழகத்தில் இருந்து சுமார் 2.28 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்தாக தமிழக அரசு அறிக்கை அளித்திருப்பதாக மத்திய அரசு கூறியது.
‘தமிழகத்தில் இருந்து 2,22,600 பேர் ரயில்கள் மூலமும், 5,200 பேர் பேருந்துகள் மூலமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 178 முகாமில் உள்ள 28,000 பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. சொந்த இருப்பிடங்களில் தங்கியுள்ள 70 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது. 3,17,000 பேருக்கு ரேஷனில் உணவும், தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது’ எனவும் தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 3.36 லட்சம் தொழிலாளர்கள் வீதம் இதுவரை 47 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X