search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதி
    X
    மாயாவதி

    மத்திய-மகாராஷ்டிரா மாநில அரசுகள் மோதலை நிறுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

    மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
    லக்னோ :

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசானாலும், தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது துரதிரு‌‌ஷ்டவசமானது.

    எனவே, இரு அரசுகளும் மோதலை நிறுத்திவிட்டு, தொழிலாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×