search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிபிஎஸ்இ
    X
    சிபிஎஸ்இ

    சிபிஎஸ்இ பொதுத்தேர்வு - புதிய அறிவிப்பு

    10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊர்களிலேயே தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு,  அரசு  பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நிறுத்தப்பட்டன.

    10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

    இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு  மாணவர்கள் தற்போது தாங்கள் இருக்கும் ஊர்களிலேயே தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

    பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்லத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×