search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    ஜார்கண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 2 வயது குழந்தை உள்பட 5 பேர் பலி

    ஜார்கண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், அந்த பகுதியில் உள்ள பாலத்தை உடைத்துக் கொண்டு குடியா ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், 5 பேரும் கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. பீகாரின் கயா மாவட்டத்தில் இருந்து அவர்கள் கொல்கத்தா செல்லும் வழியில்தான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

    இதில் 2 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், கார் டிரைவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கொல்கத்தாவில் வசிக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×