என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதுவரை 2,41,000 பேர் வெளியேறியுள்ளனர்: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்
Byமாலை மலர்26 May 2020 12:14 PM GMT (Updated: 26 May 2020 12:14 PM GMT)
மே 7-ந்தேதியில் இருந்து தற்போது வரை 196 ரெயில்கள் மூலம் 2,41,000 பேர் சொந்த மாநிலங்கள் திரும்பியுள்ளனர் என்று டெல்லி மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 14-ந்தேதி வரை 21 நாட்கள் பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மே 3-ந்தேதி வரை 19 நாட்கள் 2-வது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடிவு செய்தனர்.
நீண்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ரெயில்கள் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.
டெல்லியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் சொந்த மாநிலங்கள் திரும்பி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் டெல்லி மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில் ‘‘டெல்லியில் யார் ஒருவர் இருந்தாலும், அவர்கள் டெல்லி குடிமகன் அல்லது குடிமகளாக கருதப்படுவார்கள். இருந்த போதிலும் ஏராளமானோர் சொந்த மாநிலம் திரும்ப விரும்புகிறார்கள். கடந்த 7-ந்தேதியில் இருந்து தற்போது வரை 196 ரெயில்கள் மூலம் 2,41,000 பேர் டெல்லியில் இருந்து வெளியேறியுள்ளனர்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X