search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி லட்டு
    X
    திருப்பதி லட்டு

    ஆந்திராவில் 12 மாவட்டங்களில் முதல்நாளில் 2.40 லட்சம் திருப்பதி லட்டு விற்பனை

    ஆந்திராவில் 12 மாவட்டங்களில் ஒரே நாளில் 2.40 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் கூடுதலாக 2 லட்சம் லட்டுகளை அனுப்ப தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.

    திருப்பதி:

    கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    இதனால் ஏழு மலையானின் பிரசாதமான லட்டுகள் எங்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அதனை ஏற்று ரூ.50 மதிப்புள்ள ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை பாதியாக குறைத்து ரூ.25க்கு விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி ஆந்திரா முழுவதும் குண்டூர் தவிர்த்து 12 மாவட்ட தலைநகரங்களில் லட்டு பிரசாத விற்பனையை தேவஸ்தானம் நேற்று தொடங்கியது. குண்டூருக்கான பங்கு லட்டு விற்பனை விஜய வாடாவுக்கு மாற்றப்பட்டது.

    கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் முன்னிலையில், ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்களில் லட்டு பிரசாத விற்பனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கி சென்றனர். விற்பனை தொடங்கிய 3 மணி நேரத்திலேயே அனைத்து லட்டு பிரசாதங்களும் விற்று தீர்ந்தன.

    நேற்று ஒரே நாளில் 2.40 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளது. இதனால் கூடுதலாக 2 லட்சம் லட்டுகளை அனுப்ப தேவஸ்தானம் ஏற்பாடு செய்து வருகிறது.

    மேலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதத்தை அனுப்புவதற்காக தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநில அரசுகளின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    அம்மாநில அரசுகளின் அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்துக்கு 1 லட்சம் லட்டுகளையும், தெலுங்கானாவுக்கு 50 ஆயிரம் லட்டுகளையும் அனுப்ப தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

    Next Story
    ×