search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இமாசலபிரதேசத்தில் 2 மாவட்டங்களில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

    இமாசலபிரதேசத்தில் ஹமிர்பூர், சோலன் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை ஜூன் 30-ந்தேதி வரை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர்.
    சிம்லா:

    இமாசலபிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் மொத்த எண்ணிக்கை 214 ஆக உள்ளது. 5 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஹமிர்பூர், சோலன் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கை ஜூன் 30-ந்தேதிவரை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர். இமாசலபிரதேசத்தின் மொத்த பாதிப்பில் 25 சதவீதம், ஹமிர்பூர் மாவட்டத்தில் நேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருகிற 31-ந்தேதி நாடுதழுவிய ஊரடங்கு முடிவடையும்நிலையில், அதை நீட்டிப்பது பற்றி மத்திய அரசு இன்னும் எதுவும் கூறவில்லை. அதற்குள் ஊரடங்கு நீட்டிப்பை இமாசலபிரதேச அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×