search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேரளாவில் புதிதாக 49 பேருக்கு கொரோனா

    கேரளாவில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நேற்று புதிதாக 49 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. 

    வைரஸ் உறுதி செய்யப்பட்ட 49 பேரில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். மேலும், 25 பேர் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வந்தவர்கள். எஞ்சிய 6 பேர் உள்மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். 

    இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 896 ஆக அதிகரித்துள்ளது. 

    கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 359 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×