search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஒரே நாளில் சுமார் 1,200 பேர் டிஸ்சார்ஜ் - மகாராஷ்டிராவின் நம்பிக்கை

    மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 436 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், வைரஸ் பரவியவர்களில் 1,186 பேர் குணமடைந்துள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய விவரங்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

    அந்த தகவல்களின் அடிப்படையில் மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 436 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது.

    கோப்பு படம்

    மேலும், அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,695 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் அங்கு வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் குணமடைந்து வருகிறனர். 

    குறிப்பாக நேற்று ஒரே நாளில் வைரஸ் பரவியவர்களில் 1,186 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 786 ஆக அதிகரித்துள்ளது.      

    Next Story
    ×