search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்
    X
    முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்

    உ.பி. முதல் மந்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் - மும்பையில் ஒருவர் கைது

    உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
    மும்பை:

    உத்தர பிரதேசம் மாநில போலீஸ் தலைமையகத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை வெடிகுண்டு வீசி கொல்லப் போவதாக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.
     
    இதுதொடர்பாக, அங்குள்ள கோமதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.  விரைவில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ரன் கான் என்பவரை மும்பையில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். 
    Next Story
    ×