என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி. முதல் மந்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம் - மும்பையில் ஒருவர் கைது
Byமாலை மலர்23 May 2020 8:01 PM GMT (Updated: 23 May 2020 8:01 PM GMT)
உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மும்பை போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
மும்பை:
உத்தர பிரதேசம் மாநில போலீஸ் தலைமையகத்தின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்ததுடன், அவரை வெடிகுண்டு வீசி கொல்லப் போவதாக மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக, அங்குள்ள கோமதி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விரைவில் மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கம்ரன் கான் என்பவரை மும்பையில் மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X