என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்கள் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்
Byமாலை மலர்21 May 2020 3:28 PM GMT (Updated: 21 May 2020 3:28 PM GMT)
பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநில அரசுகள் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
கொரோனாவை விரட்ட இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு நான்கு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து குறித்து அந்தந்த மாநிலங்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆனால் பொது இடங்களில் மக்கள் அதிகமான அளவில் கூடுவதை தவிர்க்கும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மேலும், கட்டுப்பாட்டு பகுதியில் கடைபிடிக்க வேண்டியது குறித்து மாநில அரசுகளுக்கு விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது.
தற்போது பெரும்பாலான இடங்களில் இந்த வழிகாட்டுதல்கள் மீறப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், மாநிலங்கள் கண்டிப்பாக வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ‘‘அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற நடவடிக்கைகள் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்கை முறையாக வரையறுத்து, கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்த வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X