search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்டவர்கள்
    X
    கைது செய்யப்பட்டவர்கள்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 3 பேர் கைது

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பில் புதிதாக இணைந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் சாகம் பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் இணைந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதாக புகைப்படத்துடன் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

    ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை நடந்த தேடுதல் வேட்டையின்போது ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஜூனாயித் அஷ்ரப் கான் கொல்லப்பட்ட நிலையில், தற்போது 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×