search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    மாநிலங்களுக்கிடையில் வாகன போக்குவரத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி

    இரு மாநிலங்கள் சம்மதித்தால் மாநிலங்களுக்கு இடையில் கார் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்றுடன் 3-வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய பொது ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும், இரு மாநிலங்கள் சம்மதித்தால் மாநிலங்களுக்கு இடையில் கார் மற்றும் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மெட்ரோ ரெயில், பள்ளிகள், கல்லூரிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

     கார் மற்றும் பேருந்து போக்குவரத்து

    தமிழக அரசு வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள நிலையில், பொது போக்குவரத்திற்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்க்கது.
    Next Story
    ×