என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு, பொருளாதாரம் மீட்பு குறித்து உத்தவ் தாக்கரே, சரத்பவார் ஆலோசனை
Byமாலை மலர்16 May 2020 3:15 AM GMT (Updated: 16 May 2020 3:15 AM GMT)
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதாரம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.
மும்பை :
நாட்டிலேயே கொரோனாவால் மராட்டியம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பரவலின் மையப்பகுதிகளாக மாறியுள்ள மும்பை, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ் ஆகிய இடங்களில் ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பிரச்சினை மற்றும் பொருளாதாரம் மீட்பு தொடர்பாக நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட மந்திரிகளும் கலந்து கொண்டனர்.
சமூக விலகலுடன் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு, சட்டம் ஒழுங்கு நிலைமை, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் மையப்பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
நாட்டிலேயே கொரோனாவால் மராட்டியம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பரவலின் மையப்பகுதிகளாக மாறியுள்ள மும்பை, புனே, சோலாப்பூர், அவுரங்காபாத், மாலேகாவ் ஆகிய இடங்களில் ஊரடங்கை வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா பிரச்சினை மற்றும் பொருளாதாரம் மீட்பு தொடர்பாக நேற்று மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், சுற்றுச்சூழல் துறை மந்திரி ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட மந்திரிகளும் கலந்து கொண்டனர்.
சமூக விலகலுடன் சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு, சட்டம் ஒழுங்கு நிலைமை, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சினை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா பரவல் மையப்பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X