என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரருக்கு கொரோனா பாதிப்பு- டெல்லி ராணுவ தலைமையகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது
Byமாலை மலர்15 May 2020 9:52 AM GMT (Updated: 15 May 2020 9:52 AM GMT)
டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ள அதேசமயம், நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை, காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் கொரோனா பரவி உள்ளது. ராணுவத்தையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. எல்லைப் பாதுகாப்பு படை, கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகமான சேனா பவனில் பணியாற்றி வரும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வேலை பார்த்த பகுதி மட்டும் மூடப்பட்டது. அங்கு சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது.
பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய வீரர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X