search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
    X
    ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)

    வீரருக்கு கொரோனா பாதிப்பு- டெல்லி ராணுவ தலைமையகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது

    டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பணியாற்றும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ள அதேசமயம், நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. நோய்த்தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவத் துறை, காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் கொரோனா பரவி உள்ளது. ராணுவத்தையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. எல்லைப் பாதுகாப்பு படை, கடற்படையைச் சேர்ந்த வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகமான சேனா பவனில் பணியாற்றி வரும் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வேலை பார்த்த பகுதி மட்டும் மூடப்பட்டது. அங்கு சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. 

    பாதிக்கப்பட்ட ராணுவ வீரர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய வீரர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×