search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படுமா? தடை நீடிக்கப்படுமா? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் விதித்த தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. 

    டாஸ்மாக்கை மூடியதால் அரசுக்கு வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.   
    Next Story
    ×