என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய குழுவுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை
Byமாலை மலர்9 May 2020 3:16 AM GMT (Updated: 9 May 2020 3:16 AM GMT)
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய குழுவினருடன் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
மும்பை :
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் நோய்த் தொற்றுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மத்திய அரசு குழுவுடன் நோய் பாதிப்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அந்தக் குழுவும் அதிகமானவர்களை தனிமைப்படுத்த பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘‘இப்போது உள்ள தனிமைப்படுத்தும் வசதிகளை மேலும் அதிகரிக்க நாங்கள் மும்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளோம்.
மாநிலத்தில் தற்போது 64 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்
மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் நோய்த் தொற்றுக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மத்திய அரசு குழுவுடன் நோய் பாதிப்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தியதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது அந்தக் குழுவும் அதிகமானவர்களை தனிமைப்படுத்த பரிந்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘‘இப்போது உள்ள தனிமைப்படுத்தும் வசதிகளை மேலும் அதிகரிக்க நாங்கள் மும்பை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளோம்.
மாநிலத்தில் தற்போது 64 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X