என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்ரபதி சாகு மகாராஜ் விவகாரம்: தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்டார்
Byமாலை மலர்8 May 2020 3:05 AM GMT (Updated: 8 May 2020 3:05 AM GMT)
புகழ்பெற்ற ஆட்சியாளரான அவரை (சாகு மகாராஜ்) அவமதிக்க வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. எனினும் அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை :
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜின் நினைவு நாளையொட்டி டுவிட்டரில் பதிவு போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். அந்த பதிவில் அவர், சத்ரபதி சாகு மகாராஜை வெறுமனே சமூக சேவகர் என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அதை மாற்றிவிட்டார். இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜை சமூகசேவகர் என குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜனதாவால் மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சம்பாஜி ராஜி இந்த விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் வலியுறுத்தினார்.
அவருக்கு தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பதிலில், “டுவிட்டர் பதிவில் உள்ள தவறு குறித்து தெரியவந்ததும், அதை மாற்றும்படி எனது அலுவலகத்தில் கூறினேன். புகழ்பெற்ற ஆட்சியாளரான அவரை (சாகு மகாராஜ்) அவமதிக்க வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. எனினும் அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்றார்.
முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜின் நினைவு நாளையொட்டி டுவிட்டரில் பதிவு போட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தார். அந்த பதிவில் அவர், சத்ரபதி சாகு மகாராஜை வெறுமனே சமூக சேவகர் என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் அதை மாற்றிவிட்டார். இந்தநிலையில் தேவேந்திர பட்னாவிஸ் சத்ரபதி சாகு மகாராஜை சமூகசேவகர் என குறிப்பிட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜனதாவால் மேல்-சபை எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சம்பாஜி ராஜி இந்த விவகாரத்தில் தேவேந்திர பட்னாவிஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என டுவிட்டரில் வலியுறுத்தினார்.
அவருக்கு தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பதிலில், “டுவிட்டர் பதிவில் உள்ள தவறு குறித்து தெரியவந்ததும், அதை மாற்றும்படி எனது அலுவலகத்தில் கூறினேன். புகழ்பெற்ற ஆட்சியாளரான அவரை (சாகு மகாராஜ்) அவமதிக்க வேண்டும் என நினைத்து கூட பார்த்தது இல்லை. எனினும் அவரை பின்பற்றும் மக்கள் காயப்படுத்தப்பட்டனர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X