search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய உத்தவ் தாக்கரே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
    கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா பாதிப்பை கட்டுக்குகள் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இந்நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அஜித் பவார், பா.ஜனதா தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், காங்கிரஸ் தலைவர் அசோக் சவன், எம்என்எஸ் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் பல கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள்

    கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கிடையே மராட்டிய சட்டசபையின் மேலவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×