search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    ரசாயன வாயு கசிவால் 8 பேர் மரணம்... ராகுல் காந்தி இரங்கல்

    விசாகப்பட்டினத்தில் ரசாயன வாயு கசிந்து 8 பேர் மரணம் அடைந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே தொழிற்சாலையில் இருந்து ரசாயன வாயு கசிந்து வெளியேறியதில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு குழந்தை உள்ளிட்ட 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி கேள்விப்பட்ட காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.  

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விசாகப்பட்டினம் வாயு கசிவு சம்பவம் பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தேவையான உதவிகளை செய்யுங்கள். 

    இந்த சம்பவத்தால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் உள்ளவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறி உள்ளார்.
    Next Story
    ×