என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோல், டீசல் வரி உயர்வுக்கு ராகுல் காந்தி, ப.சிதம்பரம் கண்டனம்
Byமாலை மலர்7 May 2020 3:21 AM GMT (Updated: 7 May 2020 3:21 AM GMT)
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் பொருளாதாரரீதியாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்த நேரத்தில் விலையை குறைப்பதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பது நியாயமல்ல. இந்த வரிஉயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
துயரமான காலகட்டத்தில், மக்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டுமே தவிர, மக்களை நசுக்கவோ, பணம் பறிக்கவோ கூடாது.
மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக மக்களிடமிருந்து பணம் பெறுவது மிகவும் குரூரமானது.
பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் கடன் வாங்க வேண்டும். அதை விடுத்து, பொருளாதாரம் முடங்கி இருக்கும்போது வரிச்சுமையை உயர்த்தக்கூடாது.
பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும்போது புதிய வரிகள் விதிப்பதும், வரியை உயர்த்துவதும்தான் நியாயமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வரியை உயர்த்துவது மக்களை மேலும் வறுமையில் தள்ளும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
கொரோனாவால் கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் பொருளாதாரரீதியாக பாதிப்பு அடைந்துள்ளனர்.
இந்த நேரத்தில் விலையை குறைப்பதற்கு பதிலாக, பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி இருப்பது நியாயமல்ல. இந்த வரிஉயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
துயரமான காலகட்டத்தில், மக்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்க வேண்டுமே தவிர, மக்களை நசுக்கவோ, பணம் பறிக்கவோ கூடாது.
மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்துமாறு நாங்கள் கூறி வருகிறோம். ஆனால், அதற்கு நேர்மாறாக மக்களிடமிருந்து பணம் பெறுவது மிகவும் குரூரமானது.
பற்றாக்குறையை சமாளிக்க அரசாங்கம் கடன் வாங்க வேண்டும். அதை விடுத்து, பொருளாதாரம் முடங்கி இருக்கும்போது வரிச்சுமையை உயர்த்தக்கூடாது.
பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கும்போது புதிய வரிகள் விதிப்பதும், வரியை உயர்த்துவதும்தான் நியாயமானதாக இருக்கும். இந்த நேரத்தில் வரியை உயர்த்துவது மக்களை மேலும் வறுமையில் தள்ளும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X