என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்திய அரசு 17-ந் தேதிக்கு பிறகு என்ன செய்யப்போகிறது?: சோனியாகாந்தி கேள்வி
Byமாலை மலர்7 May 2020 3:14 AM GMT (Updated: 7 May 2020 3:14 AM GMT)
கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி :
கொரோனா பாதிப்பால் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ‘‘கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்ன உத்திகளை வைத்து இருக்கிறது. அதன்பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கப்போகிறதா? அதற்கு என்ன வரைமுறையை வைத்து இருக்கிறது? என்பது தெரிய வேண்டும்’’ என்று கூறினார்.
ராகுல் காந்தி பேசுகையில், ‘‘கொரோனா தொற்றில் இருந்து முதியோர், நீரிழிவு நோயாளிகள், இருதய நோயாளிகளை பாதுகாக்க என்ன திட்டம் உள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசுகையில், தங்கள் மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மாநிலங்கள் பிரதமரை பலமுறை கேட்டுக் கொண்டும் மத்திய அரசு இதுவரை நிதி உதவி திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
கொரோனா பாதிப்பால் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ‘‘கொரோனாவின் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதன்பிறகு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? என்ன உத்திகளை வைத்து இருக்கிறது. அதன்பிறகும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கப்போகிறதா? அதற்கு என்ன வரைமுறையை வைத்து இருக்கிறது? என்பது தெரிய வேண்டும்’’ என்று கூறினார்.
ராகுல் காந்தி பேசுகையில், ‘‘கொரோனா தொற்றில் இருந்து முதியோர், நீரிழிவு நோயாளிகள், இருதய நோயாளிகளை பாதுகாக்க என்ன திட்டம் உள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் பேசுகையில், தங்கள் மாநிலத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மாநிலங்கள் பிரதமரை பலமுறை கேட்டுக் கொண்டும் மத்திய அரசு இதுவரை நிதி உதவி திட்டத்தை அறிவிக்கவில்லை என்றும் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X