search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    மும்பை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து கேட்டறிந்த பட்னாவிஸ்

    தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை, ஜி.டி. மற்றும் நாயர் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
    மும்பை :

    முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் நேற்று மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை, ஜி.டி. மற்றும் நாயர் மருத்துவமனைகளுக்கு திடீரென சென்றார். பின்னர் அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், உணவுகள் உள்ளிட்ட தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.

    இதன்பின்னர் மருத்துவர்கள், நர்சுகள், போலீசாரை சந்தித்து கொரோனாவிற்கு எதிராக பங்காற்றி வரும் சேவைக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
    Next Story
    ×