என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்
Byமாலை மலர்6 May 2020 10:15 PM GMT (Updated: 6 May 2020 10:15 PM GMT)
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும். அதன்மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.
இதற்கிடையே, மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது என்ற இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், தனியுரிமை மீறப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரவிசங்கர் பிரசாத் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆரோக்கிய சேது செயலி இந்தியாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும். கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவும் பொறுப்பு மிக்க செயலியாக உள்ளது. இது மிகவும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டதாகும். தனி நபர்களின் தரவுகளை பாதுகாப்பதில் மிகவும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X