search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    5 பாதுகாப்பு படையினர் வீரமரணம்- பிரதமர் மோடி இரங்கல்

    காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    காஷ்மீர்:

    காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  பின்னர் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இதில், பயங்கரவாதிகள் திடீரென பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல், மேஜர், இரண்டு வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீஸ் ஒருவர் என ஐந்து பேர் வீர மரணம் அடைந்தனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    காஷ்மீரின் ஹந்த்வாரா பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்தனர். வீரர்களின் வீரம், தியாகம், ஒருபோதும் மறக்கப்படாது, வீர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
    Next Story
    ×