search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி
    X
    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி

    ஊரடங்கு கட்டுப்பாடுகள் உழைக்கும் வர்க்கத்தை கடுமையாக பாதித்துள்ளது - மம்தா பானர்ஜி அறிக்கை

    கொரோனாவும், அதைத்தொடர்ந்த ஊரடங்கும் உழைக்கும் வர்க்கத்தை கடுமையாக பாதித்துள்ளதாக மேற்க வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    தொழிலாளர் தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவும், அதைத்தொடர்ந்த ஊரடங்கும் உழைக்கும் வர்க்கத்தை கடுமையாக பாதித்துள்ளது. இந்த நேரத்தில் நமது சகோதர, சகோதரிகளுக்கு நாம் தோளோடு தோள் நிற்போம்.

    அதே சமயத்தில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரமும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.ஆயிரமும் வழங்கும் 2 திட்டங்களை மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×