search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை தாராவி
    X
    மும்பை தாராவி

    தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 369 ஆக உயர்வு

    மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 369 ஆக அதிகரித்துள்ளது.
    மும்பை:

    இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. 

    உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை 344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×