என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் மே இறுதிவரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க நிபுணர்கள் அறிவுரை - மம்தா பானர்ஜி
Byமாலை மலர்30 April 2020 2:02 AM GMT (Updated: 30 April 2020 2:02 AM GMT)
மேற்கு வங்காளத்தில் மே மாத இறுதிவரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க நிபுணர்கள் அறிவுறுத்தி இருப்பதாக மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலான நாடுகள், மே மாத இறுதிவரையும், ஜூன் மாதம் முதல் வாரம் வரையும் ஊரடங்கை நீட்டித்துள்ளன. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை, மே மாத இறுதிவரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர்களும், டாக்டர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.
மே மாத இறுதிக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கலாம். ஆனால், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழைக்காலத்தில் மீண்டும் தலையெடுக்கக் கூடும்.
இருப்பினும், மேற்கு வங்காளத்தில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பசுமை மண்டலங்களில், மத்திய அரசு உத்தரவுப்படி, தனி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளை திறக்கலாம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொரோனா அச்சுறுத்தல் எப்போது முடிவடையும் என்று யாருக்கும் தெரியாது. பெரும்பாலான நாடுகள், மே மாத இறுதிவரையும், ஜூன் மாதம் முதல் வாரம் வரையும் ஊரடங்கை நீட்டித்துள்ளன. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை, மே மாத இறுதிவரை கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று நிபுணர்களும், டாக்டர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.
மே மாத இறுதிக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கலாம். ஆனால், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் மழைக்காலத்தில் மீண்டும் தலையெடுக்கக் கூடும்.
இருப்பினும், மேற்கு வங்காளத்தில், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பசுமை மண்டலங்களில், மத்திய அரசு உத்தரவுப்படி, தனி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளை திறக்கலாம். இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X