search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    நான் இருக்கும்வரை நிர்க்கதியாக உணர வேண்டாம்- மம்தா பானர்ஜி

    நான் இங்கு இருக்கும்வரை, மேற்கு வங்காளத்தை சேர்ந்த யாரும் நிர்க்கதியாக உணர வேண்டாம். சிக்கலான தருணங்களில் உங்களுடன் இருப்பேன் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    கொல்கத்தா :

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவிக்கும் மேற்கு வங்காள மக்கள் வீடு திரும்ப எனது அரசு உதவும். தேவையான உதவிகள் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். நான் இங்கு இருக்கும்வரை, மேற்கு வங்காளத்தை சேர்ந்த யாரும் நிர்க்கதியாக உணர வேண்டாம். சிக்கலான தருணங்களில் உங்களுடன் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×