search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்துதல்
    X
    தனிமைப்படுத்துதல்

    முகாமில் தமிழருக்கு கொரோனா பாதிப்பு: சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த உத்தரவு

    கோழிக்கோட்டில் உள்ள முகாமில் தங்கியிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டரை தனிமைப்படுத்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
    கோழிக்கோடு:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில், இம்மாத தொடக்கத்தில், ஆதரவின்றி சாலையில் திரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த 67 வயது முதியவர், அங்குள்ள முகாமில் அடைக்கப்பட்டார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். அந்த முகாமை சமீபத்தில் சப்-கலெக்டர், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தன்னார்வலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, தமிழ்நாட்டு முதியவருக்கு கடந்த 24-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சப்-கலெக்டர், இன்ஸ்பெக்டர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சாம்பசிவ ராவ் கேட்டுக்கொண்டார்.

    பரிசோதனைக்காக அவர்களின் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×