என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி நாளை முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை
Byமாலை மலர்26 April 2020 6:49 AM GMT (Updated: 26 April 2020 8:12 AM GMT)
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாளை பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாநில முதல்-மந்திரிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பிறகு பிரதமர் மோடி அறிவித்தார். அந்த வகையில் இதுவரை 2 தடவை அவர் மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்தநிலையில் நாளை (திங்கட்கிழமை) 3-வது முறையாக பிரதமர் மோடி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது கொரோனா வைரஸ் பரவல் எந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக என்னென்ன மேற்கொள்ள வேண்டும், புதிய நடவடிக்கைகள் ஏதேனும் மேற்கொள்ள வேண்டுமா, ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளை எப்படி மேற்கொள்வது, ஏழைகள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எத்தகைய வசதிகளை செய்து கொடுப்பது போன்றவை பற்றி நாளை ஆலோசிக்கப்படுகிறது. அதன்பிறகு புதிய முடிவுகளை பிரதமர் மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X