என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் மென்பொருள் - ஐ.ஐ.டி. பேராசிரியர் உருவாக்கினார்
Byமாலை மலர்25 April 2020 8:32 AM GMT (Updated: 25 April 2020 8:32 AM GMT)
ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியும் என ஐ.ஐ.டி. பேராசிரியர் கமல் ஜெயின் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ரூர்க்கியில் உள்ள ஐ.ஐ.டி.யில் சிவில் என்ஜினீயரிங் பேராசிரியராக பணியாற்றி வருபவர் கமல் ஜெயின். இவர், 40 நாட்களாக பாடுபட்டு, ஒரு மென்பொருளை (சாப்ட்வேர்) உருவாக்கி உள்ளார். அதில், ஒருவரின் எக்ஸ்-ரேவை பயன்படுத்தி, அவருக்கு கொரோனா உள்ளதா? என்பதை 5 வினாடிகளில் கண்டறிய முடியும் என்று அவர் சொல்கிறார்.
தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி அவர் விண்ணப்பித்துள்ளார். மேலும், இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளார்.
அவர் கூறுகையில், “ஒருவரின் எக்ஸ்-ரே படத்தை வைத்து, அவருக்கு நிமோனியா அறிகுறி உள்ளதா என்று இந்த மென்பொருள் சொல்வதுடன், அது கொரோனா வைரசால் வந்ததா அல்லது வேறு பாக்டீரியவால் வந்ததா என்று கூறிவிடும். 5 வினாடிகளில் இப்பணி முடிந்து விடும். ‘பாசிட்டிவ்’ வந்த நோயாளிகள், கூடுதலாக ஆய்வக பரிசோதனை நடத்தி, இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மென்பொருள், பரிசோதனை செலவை குறைப்பதுடன், மருத்துவ பணியாளர்களுக்கான கொரோனா ஆபத்தை தவிர்க்கிறது” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X