search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவம் (கோப்பு படம்)
    X
    தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவம் (கோப்பு படம்)

    புல்வாமா என்கவுண்டர்: 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்

    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாதிகள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தும் திட்டங்களுடன் முன்னேறுகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு பாதுகாப்பு படையினர் அழிக்கின்றனர்.

    அவ்வகையில் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். 

    இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவி செய்த நபர் என மொத்தம் 3 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.
    Next Story
    ×