என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காபி போட்டு தர மறுத்ததால் ஆத்திரம்: மனைவி மீது வெந்நீரை ஊற்றிய தொழிலதிபர்
Byமாலை மலர்23 April 2020 8:28 AM GMT (Updated: 23 April 2020 8:28 AM GMT)
பெங்களூரில் காபி போட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த தொழிலதிபர், மனைவி மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபரின் மனைவி காவ்யா(வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது ஊரடங்கால் தொழில் அதிபர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார். இந்தநிலையில் அவர் தனது மனைவி காவ்யாவிடம் காபி போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் காவ்யா, காபி போட்டு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சமையல் அறையில் இருந்த வெந்நீரை எடுத்து காவ்யா மீது ஊற்றினார்.
இதனை எதிர்பாராத காவ்யா, வெந்நீரின் சூட்டை தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் காவ்யாவை மீட்டு தொட்டப்பள்ளப்புரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காவ்யா லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காவ்யா பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் உள்ள சகாயவாணி பெண்கள் பாதுகாப்பு மையம் தலைவி ராணிஷெட்டியிடம் கணவர் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில் அவர் தொட்டப்பள்ளப்புரா போலீசை தொடர்பு கொண்டு காவ்யா கணவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பெங்களூரு புறநகர் தொட்டப்பள்ளப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழில் அதிபரின் மனைவி காவ்யா(வயது 34, பெயர் மாற்றப்பட்டுள்ளது). தற்போது ஊரடங்கால் தொழில் அதிபர் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளார். இந்தநிலையில் அவர் தனது மனைவி காவ்யாவிடம் காபி போட்டு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் காவ்யா, காபி போட்டு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சமையல் அறையில் இருந்த வெந்நீரை எடுத்து காவ்யா மீது ஊற்றினார்.
இதனை எதிர்பாராத காவ்யா, வெந்நீரின் சூட்டை தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் காவ்யாவை மீட்டு தொட்டப்பள்ளப்புரா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காவ்யா லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் காவ்யா பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் உள்ள சகாயவாணி பெண்கள் பாதுகாப்பு மையம் தலைவி ராணிஷெட்டியிடம் கணவர் மீது புகார் அளித்தார்.
அதன்பேரில் அவர் தொட்டப்பள்ளப்புரா போலீசை தொடர்பு கொண்டு காவ்யா கணவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X