search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    டெல்லியில் மேலும் 75 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2156 ஆக உயர்வு

    டெல்லியில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,156 ஆக அதிகரித்துள்ளது.
    புதுடெல்லி: 

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து தலைநகர் டெல்லி 2வது இடம் பிடித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,156 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×