என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை - அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி
Byமாலை மலர்21 April 2020 2:31 PM GMT (Updated: 21 April 2020 2:31 PM GMT)
தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் வெகு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,985 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 28 பத்திரிகையாளர்களுக்கும், மும்பையில் 53 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த 53 பேரும் கொரோனா அறிகுறி இல்லாமல் இருந்தது அச்சத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான கேள்விக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிலில், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம் என பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X